கர்நாடகா இந்து நாடார் அசோசியேஷன் பொங்கல் விழா கயிறு இழுப்பதில் ஆண்கள் உற்சாகம்; கோலமிடுதலில் பெண்கள் அசத்தல்
கர்நாடகா இந்து நாடார் அசோசியேஷன் பொங்கல் விழா கயிறு இழுப்பதில் ஆண்கள் உற்சாகம்; கோலமிடுதலில் பெண்கள் அசத்தல்
கர்நாடகா இந்து நாடார் அசோசியேஷன் பொங்கல் விழா கயிறு இழுப்பதில் ஆண்கள் உற்சாகம்; கோலமிடுதலில் பெண்கள் அசத்தல்

கயிறு இழுக்கும் போட்டி
தமிழ்த்தாய் வாழ்த்து பாடியும், குத்துவிளக்கேற்றியும் விழாவை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சி துவங்கியதும் பொங்கல் பானையில், பெண்கள் பொங்கலிட்டனர். பொங்கல் பொங்கி வந்ததும், பொங்கலோ... பொங்கல் என்று உற்சாகமாக கோஷம் எழுப்பினர்.
குலுக்கல் முறையில் பரிசு
இதனை தொடர்ந்து மாறுவேட போட்டி நடந்தது. பாரத மாதா, ராதை, டாக்டர், போலீஸ் உள்ளிட்ட வேடங்களை அணிந்து வந்து, சிறுவர், சிறுமியர் அசத்தினர். சங்கம் சார்பில் ஆன்லைனில் நடத்தப்படும், தமிழ் வகுப்பில் படித்து வரும், நான்கு பேர், மேடையில் நின்று பாரதியார், அவ்வை பாடல்களை பாடி அசத்தினர். இதற்கு பலத்த கைதட்டல் எழுந்தது.
நவம்பரில் சுற்றுலா
கர்நாடகா இந்து நாடார் அசோசியேஷன் சங்க செயலர் கிருஷ்ணவேணி: கர்நாடகாவில் வசிக்கும் நாடார் சமூக தொழில் அதிபர்கள், இன்ஜினியர்களை ஒன்றிணைத்து, வேலை வாய்ப்பு உருவாக்க, சாப்ட்வேர் ஒன்றை உருவாக்கி வருகிறோம். வரும் நவம்பர் மாதம், சங்க உறுப்பினர்கள் குடும்பத்தினரை சுற்றுலா அழைத்து செல்ல உள்ளோம்.
பத்ரகாளி கோவில்
ஆர்யா ஈடிகா சங்க தலைவர் திம்மேகவுடா: கடந்த சில நாட்களுக்கு முன்பு, பெங்களூரில் ஆர்ய ஈடிகா சமூக மாநாட்டை நடத்தினேன்.