அயோத்தி போராட்ட வழக்குகள் வாபஸ் அரசுக்கு ஜெகதீஷ் ஷெட்டர் வலியுறுத்தல்
அயோத்தி போராட்ட வழக்குகள் வாபஸ் அரசுக்கு ஜெகதீஷ் ஷெட்டர் வலியுறுத்தல்
அயோத்தி போராட்ட வழக்குகள் வாபஸ் அரசுக்கு ஜெகதீஷ் ஷெட்டர் வலியுறுத்தல்
ADDED : ஜன 03, 2024 07:44 AM

ஹூப்பள்ளி: ''அயோத்தி போராட்டம் தொடர்பாக, பதிவான வழக்குகளை அரசு திரும்ப பெற வேண்டும்,'' என்று, காங்கிரஸ் எம்.எல்.சி., ஜெகதீஷ் ஷெட்டர் வலியுறுத்தி உள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட கோரி, கடந்த 31 ஆண்டுகளுக்கு முன்பு ஹூப்பள்ளியில் நடந்த போராட்டம், கலவரமாக மாறியது. இந்த வழக்கை தற்போது காங்கிரஸ் அரசு கையில் எடுத்து உள்ளது.
ஸ்ரீகாந்த் பூஜாரி என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இதற்கு பா.ஜ., எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. ஆனால், அரசின் நடவடிக்கையை அமைச்சர்கள் ஆதரித்து பேசுகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் எம்.எல்.சி., ஜெகதீஷ் ஷெட்டர், பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:
ராமஜென்ம பூமிக்காக ஹூப்பள்ளியில் நடந்த கலவர வழக்கை, அரசு திரும்ப பெற வேண்டும். இதில் அரசியல் வேண்டாம். நீதிமன்ற உத்தரவு, பழைய வழக்குகளை முடிக்கும் நோக்கில், ஸ்ரீகாந்த் பூஜாரி கைது செய்யப்பட்டு உள்ளார்.
பா.ஜ., ஆட்சியில் இருந்த போது, வழக்கை ரத்து செய்து இருந்தால், இந்த பிரச்னை வந்தே இருக்காது.
முன்பு ராமஜென்ம பூமிக்காக போராட்டம் நடத்தியவர்கள் பெயர்கள், ரவுடி பட்டியலில் சேர்க்கப்பட்டது. அதில் 60 வயது முதியவர்களும் இருந்தனர்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி அளித்த பங்களிப்பு மகத்தானது. ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு அத்வானியை அழைக்கவில்லை என்று, ஊடகங்களில் தகவல் வெளியானதும், அவருக்கு அழைப்பு விடுத்தனர்.
கட்சி மாறியதால், நான் ராம பக்தர் இல்லை என்று ஆகிவிடாது. சிறுபான்மையினருக்கு அரசு சாதகமாக செயல்படுகிறது என்று, பா.ஜ.,வினர் கூறுகின்றனர்.
தேர்தல் வரவிருக்கும் நிலையில், குற்றச்சாட்டுகள் சகஜமானது. வளர்ச்சி அடிப்படையில், தேர்தலை நடத்த வேண்டும். மதத்தை முன்வைத்து இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.