Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/மனைவி கொலையில் கணவர் கைது நண்பரை ஏவி கொன்றது அம்பலம்

மனைவி கொலையில் கணவர் கைது நண்பரை ஏவி கொன்றது அம்பலம்

மனைவி கொலையில் கணவர் கைது நண்பரை ஏவி கொன்றது அம்பலம்

மனைவி கொலையில் கணவர் கைது நண்பரை ஏவி கொன்றது அம்பலம்

ADDED : பிப் 10, 2024 06:27 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு: மனைவி கொலையில் கணவர் கைது செய்யப்பட்டார். நண்பரையே கூலிப்படையாக ஏவி கொன்றது அம்பலமாகி உள்ளது.

பெங்களூரு மஹாலட்சுமி லே - அவுட்டில் வசிப்பவர் சிவசங்கர். இவரது மனைவி பிரேமலதா, 35. கடந்த 4ம் தேதி வீட்டில் துாக்கில் தொங்கிய நிலையில், பிணமாக மீட்கப்பட்டார்.

அவரது கால் தரையில் இருந்ததால், மர்ம சாவு என வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பிரேமலதாவை அவரது கணவர் சிவசங்கர் கொன்றதாக, குடும்பத்தினர் குற்றச்சாட்டினர். அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

சம்பவம் நடந்த நேரத்தில், சிவசங்கர் மொபைல் போன் டவர் எங்கு இருந்தது என்று, போலீசார் ஆய்வு செய்த போது, அவர் மஹாலட்சுமி லே - அவுட்டில் இல்லை என்று காட்டியது. இதனால் அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் கொலை நடந்த இடத்தை சுற்றி, பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில், பதிவான காட்சிகளின் அடிப்படையில், துமகூரை சேர்ந்த வினய், 36 என்பவரை பிடித்து, போலீசார் விசாரித்தனர்.

சிவசங்கர் கூறியதால், பிரேமலதா கழுத்தை நெரித்து கொன்றதை ஒப்புக்கொண்டார். இதனால் அவரும், சிவசங்கரும் கைது செய்யப்பட்டனர்.

சிவசங்கருக்கு, பிரேமலதாவின் நடத்தையில் சந்தேகம் இருந்து உள்ளது. இதுதொடர்பாக அவர்கள் இருவருக்கும், அடிக்கடி தகராறும் ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில் வினய் அறிமுகம், சிவசங்கருக்கு கிடைத்தது. அவர்கள் இருவரும் நண்பர்களாக பழகினர். மனைவி நடத்தையில் சந்தேகம் இருப்பது பற்றி, வினயிடம், சிவசங்கர் கூறி உள்ளார்.

அப்போது வினய், என் மனைவி நடத்தையில் எனக்கு, சந்தேகம் இருந்தது. கடந்த ஆண்டு அவளை, ஏரியில் தள்ளி கொன்றேன்.

தற்கொலை செய்ததாக போலீசை நம்ப வைத்தேன். உனது மனைவியையும் கழுத்தை நெரித்து கொன்று, துாக்கில் தொங்கவிட்டு தற்கொலை நாடகம் ஆடலாம் என்று, ஐடியா கொடுத்து உள்ளார்.

இதற்கு சம்மதித்த சிவசங்கர், வினய்க்கு பணம் கொடுத்து, பிரேமலதாவை, தீர்த்துக்கட்டும்படி கூறி உள்ளார்.

கடந்த 4ம் தேதி சிவசங்கரை வெளியே அனுப்பி வைத்துவிட்டு, அவரது வீட்டிற்கு சென்ற வினய், தனியாக இருந்த பிரேமலதாவை, கழுத்தை நெரித்து கொன்று உள்ளார்.

பின்னர் அவரது உடலை துாக்கில் தொங்க விட்டு தப்பியதும், போலீசார் நடத்திய விசாரணையில், அம்பலமாகி உள்ளது.

ஒரு கொலை வழக்கை விசாரித்த போது, இன்னொரு கொலை வழக்கும் வெளி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us