ஈரான் அணு ஆயுத தளங்கள் மீது இஸ்ரேல் குண்டு மழை: அணு விஞ்ஞானிகள், 3 ராணுவ தளபதி பலி
ஈரான் அணு ஆயுத தளங்கள் மீது இஸ்ரேல் குண்டு மழை: அணு விஞ்ஞானிகள், 3 ராணுவ தளபதி பலி
ஈரான் அணு ஆயுத தளங்கள் மீது இஸ்ரேல் குண்டு மழை: அணு விஞ்ஞானிகள், 3 ராணுவ தளபதி பலி


ரகசிய தளங்கள்
இந்த தாக்குதலுக்கு பல ஆண்டுகளாக இஸ்ரேல் திட்டம் தீட்டி வந்தது. அதன் ஒரு பகுதியாக ஈரானுக்குள் ஊடுருவிய இஸ்ரேல் உளவுப்படையான மொசாத் அமைப்பின் வீரர்கள், இலக்குகளின் அருகே ரகசிய தளங்கள் அமைத்து ஏவுகணைகளையும் ட்ரோன்களையும் தயார் நிலையில் வைத்திருந்தனர். விமான தாக்குதலை தொடங்குவதற்கு சற்று முன்னதாக ஏவுகணைகளையும் ட்ரோன்களையும் ரிமோட் கன்ட்ரோல் முறையில் ஆக்டிவேட் செய்து, ஈரானின் வான் கவச கட்டமைப்பை துல்லியமாக தாக்கி முடக்கினர். இதனால் இஸ்ரேல் விமானங்கள், எந்த எதிர்ப்பும் இல்லாமல் பறந்து வந்து இலக்குகளை தாக்க ஏதுவானது.
வான்வெளி மூடல்
சில மணிநேரத்தில் இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதலை துவங்கியது. நூற்றுக்கணக்கான ட்ரோன்களில் குண்டுகளை வைத்து இஸ்ரேலுக்குள் செலுத்தியது. பெரும்பாலான ட்ரோன்களை நாட்டில் நுழையுமுன்பே தடுத்து அழித்ததாக இஸ்ரேல் ராணுவம் கூறியது.
பிரதமர் மோடியிடம் விளக்கிய இஸ்ரேல் பிரதமர்
ஈரானின் அணு ஆயுத தளங்கள், ஏவுகணை உற்பத்தி மையங்கள் மீதான தாக்குதலின் நோக்கம் குறித்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பிரதமர் மோடியை தொடர்புகொண்டு விளக்கம் அளித்தார்.