காஷ்மீருக்குள் 600 பாக்., கமாண்டோக்கள் ஊடுருவல்? தீவிர தேடுதல் வேட்டையில் இந்திய ராணுவம்
காஷ்மீருக்குள் 600 பாக்., கமாண்டோக்கள் ஊடுருவல்? தீவிர தேடுதல் வேட்டையில் இந்திய ராணுவம்
காஷ்மீருக்குள் 600 பாக்., கமாண்டோக்கள் ஊடுருவல்? தீவிர தேடுதல் வேட்டையில் இந்திய ராணுவம்

3 குழுக்களாக
இது தொடர்பாக அம்ஜத் அயுப்மிர்சா வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது:
நோக்கம்
எஸ்எஸ்ஜி குழுவில் லெப்டினன்ட் காலினல் அந்தஸ்தில் உள்ள ஷாகித் சலீம் ஜன்ஜூவா, தற்போது காஷ்மீரில் ஊடுருவி உள்ளார். இவர், தாக்குதல் நடத்தும் திட்டங்களை தயாரித்து வருகிறார். இந்திய ராணுவத்தின் 15 கார்ப்ஸ் பிரிவினருடன் மோதுவதே இவர்களின் நோக்கமாக உள்ளது.
தயார்
காஷ்மீருக்குள் ஊடுருவ எஸ்எஸ்ஜி குழுவின் இரண்டு பட்டாலியன்கள் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. சுமைதூக்கும் தொழிலாளிகள் மற்றும் சாமானிய மக்கள் போல் ஊடுருவி உள்ள இவர்கள், மக்களுடன் கலந்து மறைந்துள்ளனர். தாக்குதலுக்கு தயாராகி வருகின்றனர். இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.
தேடுதல் பணி தீவிரம்
இதனையடுத்து காஷ்மீரில், இந்திய ராணுவத்தினர் கிராமம், கிராமமாக தீவிரமாக கமாண்டோக்களை தேடி வருகின்றனர். இந்த பணியை பிரதமர் அலுவலகம் நேரடியாக கண்காணித்து வருகிறது. தேடும் பணி குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர், இந்திய ராணுவ தளபதிக்கு அறிக்கை அளித்து வருகின்றனர். பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக கூறப்படும் பகுதிகளில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.