கருத்து கணிப்புகளால் 'இண்டியா' கூட்டணி கோபம்! பா.ஜ.,வின் உளவியல் விளையாட்டு என ஆவேசம்
கருத்து கணிப்புகளால் 'இண்டியா' கூட்டணி கோபம்! பா.ஜ.,வின் உளவியல் விளையாட்டு என ஆவேசம்
கருத்து கணிப்புகளால் 'இண்டியா' கூட்டணி கோபம்! பா.ஜ.,வின் உளவியல் விளையாட்டு என ஆவேசம்

தேர்தல் முறைகேடு
காங்கிரஸ் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ், செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த கருத்துக்கணிப்புகள் முற்றிலும் போலியானது. நாளைய தினம் வெளியேறப்போகும் மனிதரால் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டுள்ளது. அவர் வெளியேறுவதை யாராலும் தடுக்க முடியாது.
உறுதியான நடவடிக்கை
ஓட்டு எண்ணும் மையத்தில், வேட்பாளர்களின் முகவர்கள், உதவி தேர்தல் அதிகாரியின் மேஜை அருகே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்ற தகவல் அறிந்து, எங்கள் கட்சி பொருளாளர் அஜய் மாக்கன் அதுகுறித்து முறையிட்டுஉள்ளார்.
தவறாக வழிநடத்துவதா?
ஏற்கனவே, இதேபோல வெளியான கருத்துக் கணிப்புகள் பலவும், தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளன. பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையில் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. டில்லியில் அனைத்து தொகுதிகளிலும் 'இண்டியா' கூட்டணி வெற்றி பெறும்.
ஏற்கனவே தயாரிக்கப்பட்டது!
ஆளுங்கட்சிக்கு வேண்டியவர்களால் பல மாதங்களுக்கு முன்பே தயாரிக்கப்பட்டது தான், இந்த கருத்துக்கணிப்பு. பொதுமக்களை ஏமாற்றுவதற்காக இதுபோன்ற கருத்துக் கணிப்புகளை வெளியிடுகின்றனர். உண்மையில் ஓட்டு எண்ணிக்கை நடக்கும் நாளன்று, 'இண்டியா' கூட்டணியினர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.