Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/பதவியேற்க ஜாமின் கோரும் திகார் சிறைவாசியான சுயேட்சை எம்.பி.,

பதவியேற்க ஜாமின் கோரும் திகார் சிறைவாசியான சுயேட்சை எம்.பி.,

பதவியேற்க ஜாமின் கோரும் திகார் சிறைவாசியான சுயேட்சை எம்.பி.,

பதவியேற்க ஜாமின் கோரும் திகார் சிறைவாசியான சுயேட்சை எம்.பி.,

ADDED : ஜூன் 24, 2024 10:48 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி: எம்.பி.யாக பதவியேற்க ஜாமின் கோரி திகார் சிறையில் உள்ள சுயேட்சை எம்.பி. தாக்கல் செய்த மனுவுக்கு ஜூலை 01-ம் தேதி பதில் அளிக்க என்.ஐ.ஏ.,வுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் வெற்றி பெற்ற என்ஜீனியர் ரஷீத் என்று அழைக்கப்படும் அப்துல் ரஷீத் என்பவர் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்த குற்றச்சாட்டின் கீழ் 2019ல் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ளார்.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாராமுல்லா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவை தோற்கடித்து எம்.பி.,யானார்.

இந்நிலையில் எம்.பி.,யாக பதவியேற்க ஜாமின் கோரி டில்லி கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி கிரண் குப்தா, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சி பதில் அளிக்க உத்தரவிட்டு மனுவை ஜூலை 01 ம் தேதி ஒத்தி வைத்தார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us