Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/பாமாயில் மீதான இறக்குமதி வரி: மத்திய அரசிடம் ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்

பாமாயில் மீதான இறக்குமதி வரி: மத்திய அரசிடம் ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்

பாமாயில் மீதான இறக்குமதி வரி: மத்திய அரசிடம் ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்

பாமாயில் மீதான இறக்குமதி வரி: மத்திய அரசிடம் ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்

ADDED : ஜூன் 15, 2025 09:38 PM


Google News
Latest Tamil News
அமராவதி: புகையிலை விவசாயிகளை ஆதரிக்கவும், பாமாயில் மீதான இறக்குமதி வரி குறைப்பதை மறுபரிசீலனை செய்யவும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளார்.

வர்த்தகம், விவசாயம் மற்றும் மாநில-குறிப்பிட்ட கவலைகள் தொடர்பான முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க, மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இன்று குண்டூரில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்தார்.

அப்போது,மாநிலத்தின் விவசாயம், வர்த்தகம் மற்றும் ஏற்றுமதித் துறைகளைப் பாதிக்கும் முக்கிய பிரச்சினைகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.மேலும் புகையிலை கொள்முதல், பாமாயில் மீதான இறக்குமதி வரிகள், மீன் ஏற்றுமதியில் உள்ள சவால்கள் மற்றும் மாம்பழ கூழ் மீதான வரிவிதிப்பு உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

பாமாயில் மீதான குறைக்கப்பட்ட இறக்குமதி வரிகள் உள்ளூர் உற்பத்தியாளர்களை மோசமாக பாதிக்கின்றன என்றும், தேசிய சமையல் எண்ணெய்கள் திட்டத்தின் இலக்குகளை அடைவதற்கான முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் சந்திரபாபு வலியுறுத்தினார்.

கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட அனைத்து பிரச்சினைகளையும் மத்திய அரசு கவனிக்கும் என்று மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் , சந்திரபாபு விடம் உறுதியளித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us