ADDED : ஜன 19, 2024 01:06 AM
மத்திய அரசு அலுவலகங்கள், மத்திய தொழில்துறை நிறுவனங்களுக்கு வரும் 22ல் அரை நாள் விடுமுறை அளித்து மத்திய அரசு பணியாளர்கள் நலத்துறை அறிக்கை வெளியிட்டது. இதை தொடர்ந்து, பொதுத்துறை வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், பிராந்திய கிராமப்புற வங்கிகளுக்கும் அன்றைய தினம் அரை நாள் விடுப்பு அளித்து மத்திய நிதி அமைச்சகம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனால், 22ம் தேதி காலையில் வங்கிகள் இயங்காது என வங்கித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


