சோபியானில் என்கவுன்டர்: லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை
சோபியானில் என்கவுன்டர்: லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை
சோபியானில் என்கவுன்டர்: லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: சோபியானில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும், பாகிஸ்தான் ஆக்கிமிரப்பு எல்லையில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவரும் பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கைகளை இந்திய ராணுவம் மேற்கொண்டு வருகிறது. பஹல்காம் சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதிகளை தீவிரமாக தேடி வரும் இந்திய ராணுவம், அவர்களது தலைக்கு ரூ.20 லட்சம் வெகுமதி அறிவித்துள்ளது.
இந்நிலையில் சோபியான் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையத்து, அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
அப்போது மறைவிடம் ஒன்றில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் சிலர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். சுதாரித்துக் கொண்ட பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதலில் இறங்கினர்.
இரு தரப்பிலும் நீடித்த துப்பாக்கிச் சண்டையின் முடிவில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுகுறித்து பாதுகாப்பு படை உயரதிகாரிகள் கூறியதாவது;
தெற்கு காஷ்மீர் சுக்ரு வனப்பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினோம். எங்களுடன் போலீசாரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
பயங்கரவாதிகள் எங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். நாங்களும் பதிலடி தந்தோம். லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
அடையாளம் தெரிந்தது
கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் இருவரின் அடையாளம் தெரியவந்துள்ளது.