Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/வட்டி பிரச்னையில் அரசு ஊழியர் கொலை

வட்டி பிரச்னையில் அரசு ஊழியர் கொலை

வட்டி பிரச்னையில் அரசு ஊழியர் கொலை

வட்டி பிரச்னையில் அரசு ஊழியர் கொலை

ADDED : ஜன 29, 2024 07:23 AM


Google News
ஹாசன்: ஹாசன் மாவட்டம், பேலுார் கிரிகட்டே கிராமத்தின் தேவராஜ், 52. லக்குந்தா கிராம பஞ்சாயத்து ஊழியர். 2021ம் ஆண்டு பாஸ்கர், குஷி ஆகியோரிடம் இருந்து, தேவராஜ் தலா 50,000 கடன் வாங்கி இருந்தார். இதற்கு இதுவரை வட்டியாக 2 லட்சம் ரூபாய், கட்டி உள்ளார். ஆனாலும் கூடுதல் வட்டி கேட்டு, தேவராஜிக்கு, இருவரும் தொல்லை கொடுத்தனர்.

கடந்த 7ம் தேதி வட்டி கட்டுவதில் ஏற்பட்ட பிரச்னையில், தேவராஜை, இருவரும் தாக்கினர். அவரை பிடித்து கீழே தள்ளினர். தலையில் படுகாயம் அடைந்தவர், ஹாசன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர், கோமா நிலைக்குச் சென்றார். நேற்று மதியம் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதுபற்றி அறிந்த பாஸ்கர், குஷி தலைமறைவாகிவிட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us