வீட்டு விஷேங்களுக்கு போங்க... ஓட்டு சேகரிப்பில் தி.மு.க.,
வீட்டு விஷேங்களுக்கு போங்க... ஓட்டு சேகரிப்பில் தி.மு.க.,
வீட்டு விஷேங்களுக்கு போங்க... ஓட்டு சேகரிப்பில் தி.மு.க.,

அழையா விருந்தாளிகள்
புதுமையான இந்த ஏற்பாடு, சென்னையில் உடனடியாக அமலுக்கு வந்து விட்டது. துணை முதல்வர் உதயநிதியின் தொகுதியில் அடங்கிய சேப்பாக்கம், திருவல்லிக்கேணி பகுதிகளில் வசிப்போர், தங்கள் வீடுகளில் நடத்திய சுப நிகழ்ச்சிகளில், லோக்கல் தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்று வாழ்த்தியதையும், கணிசமான மொய் எழுதியதையும் பார்த்து இன்ப அதிர்ச்சியில் மூழ்கினர்.
வியூகம்
விஷயம் தீயாக பரவியதால், வீட்டில் விசேஷம் நடத்த இருப்பவர்கள் அவசரமாக உள்ளூர் தி.மு.க., புள்ளிகள் குறித்து தகவல் சேகரிக்க துவங்கிஉள்ளனர். இந்த ஏற்பாடு யாருடைய மூளையில் உதித்தது என்பதை அறிய அறிவாலயத்தில் விசாரித்த போது, புன்சிரிப்பு மட்டுமே பதிலாக கிடைத்தது.
நிதியுதவி
ஒவ்வொரு பூத்திலும், 60 சதவீதத்துக்கு குறையாமல் ஓட்டுகளை பெறும் வகையில், மொய் எழுதும் திட்டம் தீட்டப்பட்டதாக அவர்கள் மேலும் கூறினர். விசேஷ வீடு தான் என்று இல்லாமல், விபத்து போன்ற கஷ்டங்களால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கும் நிதியுதவி செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. வசதி படைத்த மற்ற பெரிய கட்சிகளும் இதை பின்பற்றுமா என்பது தான் வாக்காளர்கள் மனதில் எழுந்துள்ள கேள்வி.