Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/கலாச்சார பாரம்பரியத்திற்கு உலக அரங்கில் மரியாதை: அமித்ஷா பெருமிதம்

கலாச்சார பாரம்பரியத்திற்கு உலக அரங்கில் மரியாதை: அமித்ஷா பெருமிதம்

கலாச்சார பாரம்பரியத்திற்கு உலக அரங்கில் மரியாதை: அமித்ஷா பெருமிதம்

கலாச்சார பாரம்பரியத்திற்கு உலக அரங்கில் மரியாதை: அமித்ஷா பெருமிதம்

ADDED : பிப் 11, 2024 03:33 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

மைசூர்: 'இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்திற்கு உலக அரங்கில் மரியாதை கிடைக்க பிரதமர் நரேந்திர மோடி உழைத்துள்ளார்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டி உள்ளார்.

கடந்த ஜன.,22ம் தேதி அயோத்தி ராமர் கோயிலில் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலையை கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சிற்பி அருண் யோகி ராஜ் உருவாக்கினார். மைசூரில், சிற்பி அருண் யோகி ராஜை பாராட்டும் விதமாக நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியி,ல் அமித்ஷா கலந்து கொண்டு பேசியதாவது: அயோத்தியில் ஸ்ரீராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதை நாங்கள் அனைவரும் பார்த்தோம்.

அயோத்தியில் ராமர் கோயில், கேதர்நாத் மற்றும் பத்ரிநாத் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களின் மறுமலர்ச்சிக்கான பணிகளை மோடி செய்துள்ளார். இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்திற்கு உலக அரங்கில் மரியாதை கிடைக்க பிரதமர் நரேந்திர மோடி உழைத்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார். ராமர் சிலையை செதுக்கிய சிற்பி அருண் யோகி ராஜை அமித்ஷா பாராட்டினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us