ADDED : ஜூன் 14, 2025 09:04 PM

ஜன்பத் மத்திய தலைமைச் செயலக கட்டடத்தின், மூன்றாவது மாடியில் நேற்று காலை, 11:00 மணிக்கு தீப்பற்றியது. தகவல் அறிந்து, 15 வண்டிகளில் தீயணைப்புப் படையினர் வந்தனர். மதியம் 12:20 மணிக்கு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பர்னிச்சர்கள் மற்றும் ஆவணங்கள் தீயில் கருகின.