Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/போலி ஜி.எஸ்.டி., நிறுவனம்: டில்லியில் வழக்கறிஞர் உள்ளிட்ட 2 பேர் கைது

போலி ஜி.எஸ்.டி., நிறுவனம்: டில்லியில் வழக்கறிஞர் உள்ளிட்ட 2 பேர் கைது

போலி ஜி.எஸ்.டி., நிறுவனம்: டில்லியில் வழக்கறிஞர் உள்ளிட்ட 2 பேர் கைது

போலி ஜி.எஸ்.டி., நிறுவனம்: டில்லியில் வழக்கறிஞர் உள்ளிட்ட 2 பேர் கைது

ADDED : ஜூன் 21, 2025 06:15 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி: போலியாக ஜி.எஸ்.டி., நிறுவனங்களை நடத்தி வரி ஏய்ப்பு மோசடி செய்ததாக,வழக்கறிஞர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

டில்லியின் தென்மேற்கு பகுதியில் போலியாக நிறுவனங்களை நடத்தி, ஜி.எஸ்.டி., வரிகளை எளிதாக்க, போலி ரசீதுகள் தயாரிக்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, தீவிர கண்காணிப்பு வளயைத்திற்கு கொண்டுவரப்பட்டது. அவ்வாறு நடத்திய சோதனையில் போலியான வரி வசூல் ரசீது தாயாரிப்பில் ஈடுபட்ட வழக்கறிஞர் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

டில்லி போலீஸ் துணை அதிகாரி அமித் கோயல் கூறியதாவது:

போலி ரசீது தயாரித்து குற்றம் சாட்டப்பட்டு கைதானவர்கள்,ஹரியானாவின் பானிபட்டைச் சேர்ந்த சந்தீப் 27, டில்லியின் புராரியில் வசிக்கும் வழக்கறிஞர் இந்தர்பால் 45,என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

போலி ஜி.எஸ்.டி., நிறுவனங்களை பதிவு செய்ய இருவரும் பான் கார்டுகள், ஆதார் கார்டுகள், சிம் கார்டுகள், வாடகை ஒப்பந்தங்கள் மற்றும் மின்னஞ்சல் ஐ.டி.,கள் போன்ற அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தினர், பின்னர் அவை மோசடியான இன்வாய்ஸ்களை உருவாக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது தெரியவந்துள்ளது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு அமித் கோயல் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us