Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவோருக்கு டில்லி மெட்ரோ ரயில் சிறப்பு ஏற்பாடு

சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவோருக்கு டில்லி மெட்ரோ ரயில் சிறப்பு ஏற்பாடு

சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவோருக்கு டில்லி மெட்ரோ ரயில் சிறப்பு ஏற்பாடு

சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவோருக்கு டில்லி மெட்ரோ ரயில் சிறப்பு ஏற்பாடு

ADDED : மே 24, 2025 12:19 AM


Google News
புதுடில்லி:சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுவோர் வசதிக்காக, டில்லி மெட்ரோ ரயில் சேவை நாளை காலை, 6:00 மணிக்கே துவங்கும் என டில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, டில்லி மெட்ரோ ரயில் நிறுவன முதன்மை நிர்வாக இயக்குனர் அனுஜ் தயாள் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸஸ் முதன்மைத் தேர்வு நாளை நடக்கிறது.

தேர்வு எழுதுவோர் வசதிக்காக மெட்ரோ ரயில் வழித்தடத்தில் பிங்க் லைன், மெஜந்தா லைன் மற்றும் கிரே லைன் ஆகிய வழித்தடங்களில் வழக்கத்தை விட முன்னதாக காலை 6:00 மணிக்கே ரயில்கள் இயக்கப்படும்.

இதனால், தேர்வு எழுதச் செல்வோர் தங்கள் தேர்வு மையங்களை சரியான நேரத்தில் அடைய முடியும்.

பிங்க் வழித்தடத்தில் மஜ்லிஸ் பார்க், -ஷிவ் விஹார் மற்றும் மஜ்பூர்- பாபர்பூர் ஆகிய நிலையங்களில் இருந்து 6:00 மணிக்கு முதல் ரயில் புறப்படும். அதேபோல், மெஜந்தா தடத்தில் ஜனக்புரி மேற்கு மற்றும் தாவரவியல் பூங்காவிலிருந்து காலை 6:00 மணிக்கு ரயில் புறப்படும். அதேநேரத்தில், கிருஷ்ணா பார்க் விரிவாக்கம் நிலையத்தில் இருந்து அதிகாலை 5:50 மணிக்கு ரயில் புறப்படும்.

கிரே வழித்தடத்தில், தன்சா பேருந்து நிலையம் மற்றும் துவாரகா சந்திப்பு நிலையங்களில் இருந்து காலை 6:00 மணிக்கு சேவை துவங்கும்.

இதுதவிர, மற்ற வழித்தடங்களில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us