ஆவாரம் பூ வடிவில் வந்தது ஆபத்து : வேகமாக பரவும் சீமை கொன்றை தாவரம்!
ஆவாரம் பூ வடிவில் வந்தது ஆபத்து : வேகமாக பரவும் சீமை கொன்றை தாவரம்!
ஆவாரம் பூ வடிவில் வந்தது ஆபத்து : வேகமாக பரவும் சீமை கொன்றை தாவரம்!

ஆவாரம் பூ தோற்றம்
தொலைவில் இருந்து பார்த்தால், ஆவாரம் பூ போன்று காட்சியளிக்கும், 'சென்னா ஸ்பெக்டாபிலிஸ்' என்று, ஆங்கிலத்தில் பெயரிடப்பட்ட புதிய களை தாவரம், வனப்பகுதிகளுக்கு ஆபத்தாக அமைந்துள்ளது. தமிழில், 'சீமை கொன்றை' என்று, இத்தாவரம் குறிப்பிடப்படுகிறது.துாய மஞ்சள் வண்ணத்தில் காணப்படும் இதன் மலர்கள், ஆவாரம் பூ போன்று இருப்பதால், வனத் துறை பணியாளர்களே, இதை இன்னும் களை தாவரமாக வகைப்படுத்துவதில் சிரமப்படுகின்றனர். இதன் காரணமாக இத்தாவரம் பெருகி வருகிறது.
பாதிப்பு என்ன?
இதுகுறித்து, கேரளா பரம்பிக்குளம் புலிகள் காப்பக வன உயிரின கண்காணிப்பு வல்லுனர் எம்.பாலசுப்ரமணியம் கூறியதாவது:தென் மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளில் தான், சென்னா ஸ்பெக்டாபிலிஸ் தாவரம் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. அலங்கார தாவரம் என்ற அடிப்படையில், இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்குள் வந்த இத்தாவரம்,
அழிக்கும் பணியில் தமிழகம் தீவிரம்
தமிழக வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில் அன்னிய களைச் செடிகளை அகற்றும் பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன. உண்ணிச் செடி, சீமை கருவேலம், சிகை மரம், ஆயப்பனை, பார்த்தீனியம் ஆகிய களைச் செடிகளுடன், சென்னா ஸ்பெக்டாபிலிஸ் எனப்படும் சீமை கொன்றை தாவரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.


