Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ இந்தியாவில் 7,400 பேருக்கு கொரோனா; தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் 9 பேர் பலி

இந்தியாவில் 7,400 பேருக்கு கொரோனா; தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் 9 பேர் பலி

இந்தியாவில் 7,400 பேருக்கு கொரோனா; தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் 9 பேர் பலி

இந்தியாவில் 7,400 பேருக்கு கொரோனா; தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் 9 பேர் பலி

ADDED : ஜூன் 14, 2025 12:47 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி: இந்தியாவில் கொரோனா தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து வரும் நிலையில், தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 7,400 எட்டியுள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. குறிப்பாக தலைநகர் டில்லி, மஹாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களில் தினமும் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்த நிலையில், நாடு முழுவதும் தற்போது வரையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,400 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 269 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக கர்நாடகாவில் ஒரே நாளில் 132 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் 79 பேரும், கேரளாவில் 54 பேரும், மத்திய பிரதேசத்தில் 20 பேரும், தமிழகத்தில் 12 பேரும்சிக்கிமில் 11 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மஹாரஷ்டிராவில் 4 பேரும், கேரளாவில் 3 பேரும், தமிழகம் மற்றும் ராஜஸ்தானில் தலா ஒருவரும் இந்த நோய் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். கடந்த ஜன.,1ம் தேதி முதல் தற்போது வரை, ஒட்டுமொத்தமாக 87 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்று பரவி வருவதால், வயதானவர்கள் மற்றும் இணை நோய் பாதிப்பு உள்ளவர்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்லுமாறு சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us