பா.ஜ.,வுக்கு எதிராக 'வலு' வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் காங்கிரஸ் திணறல்
பா.ஜ.,வுக்கு எதிராக 'வலு' வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் காங்கிரஸ் திணறல்
பா.ஜ.,வுக்கு எதிராக 'வலு' வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் காங்கிரஸ் திணறல்

20 தொகுதி
கர்நாடகாவில் ஆளுங்கட்சியாக இருப்பதால், குறைந்தபட்சம் 20 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் இலக்கை எட்ட, திறமையான வேட்பாளர்களை தேடுவது, கட்சிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. சில மாதங்களுக்கு முன், ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல் நடந்த போது, எம்.பி.,க்கள் சிலரை பா.ஜ., களமிறக்கியது. இவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
தெறித்து ஓட்டம்
இதே யுக்தியை கையாள காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. எட்டு, முதல் ஒன்பது அமைச்சர்களை லோக்சபா தேர்தலில் களமிறக்க முடிவு செய்துள்ளது. சிலர் மேலிட உத்தரவுக்கு பணிந்து, லோக்சபா தேர்தலில் போட்டியிட அரை மனதாக தயாராகின்றனர்.
யார், யார்?
பா.ஜ.,வை எதிர்கொள்ள, திறமையான வேட்பாளர்களை களமிறக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அமைச்சர்கள், அனுபவம் மிக்க தலைவர்களை களமிறக்கினால், வெற்றி பெறலாம் என, காங்., மேலிடம் எண்ணுகிறது. எம்.எல்.ஏ.,க்கள், தலைவர்களிடம் கருத்து சேகரித்து, உத்தேச வேட்பாளர்கள் பட்டியலை, மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் தயாரிக்கிறார்.