வேலைக்கு நிலத்தை லஞ்சமாக வாங்கிய லாலு - தேஜஸ்வி மீது குற்றப்பத்திரிக்கை
வேலைக்கு நிலத்தை லஞ்சமாக வாங்கிய லாலு - தேஜஸ்வி மீது குற்றப்பத்திரிக்கை
வேலைக்கு நிலத்தை லஞ்சமாக வாங்கிய லாலு - தேஜஸ்வி மீது குற்றப்பத்திரிக்கை
ADDED : ஆக 06, 2024 07:08 PM

புதுடில்லி: ரயில்வே வேலைக்கு நிலம் லஞ்சமாக வாங்கிய வழக்கில் முன்னாள் பீஹார் முதல்வர் லாலு, அவரது மகன் தேஜஸ்வியாதவ் ஆகியோர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
பீஹார் முன்னாள் முதல்வரான லாலு பிரசாத் யாதவ், 2004 முதல் 2009 வரை காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ரயில்வே அமைச்சராக இருந்தார்.
அப்போது ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதற்காக, தன் பெயரிலும், குடும்பத்தினர் பெயரிலும் நிலங்களை லஞ்சமாக வாங்கியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்குகளை, அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.
இதில் மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரை தலைமையிடமாக வைத்து செயல்படும் மேற்கு மத்திய ரயில்வேயில் நடந்த ஊழல் தொடர்பாக லாலு பிரசாத் யாதவ், அவருடைய மனைவி ராப்ரி மற்றும் மகன் தேஜஸ்வி உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் இன்று (ஆக.,06) அமலாக்கத்துறை லாலு பிரசாத், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட 8 பேர் மீது , புதுடில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அடுத்த விசாரணை ஆக. 13-ம் தேதிக்கு நீதிபதி விஷால் கோனே ஒத்தி வைத்தார்.