Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ஓட்டு எண்ணிக்கையின்போது குண்டுவெடிப்பு: மே.வங்கத்தில் 10 வயது சிறுமி உயிரிழப்பு

ஓட்டு எண்ணிக்கையின்போது குண்டுவெடிப்பு: மே.வங்கத்தில் 10 வயது சிறுமி உயிரிழப்பு

ஓட்டு எண்ணிக்கையின்போது குண்டுவெடிப்பு: மே.வங்கத்தில் 10 வயது சிறுமி உயிரிழப்பு

ஓட்டு எண்ணிக்கையின்போது குண்டுவெடிப்பு: மே.வங்கத்தில் 10 வயது சிறுமி உயிரிழப்பு

ADDED : ஜூன் 23, 2025 05:35 PM


Google News
Latest Tamil News
கோல்கட்டா: மேற்குவங்க மாநிலம் கலிகஞ்ச் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கையின் போது வெடிகுண்டு வெடித்ததில் 10 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கலிகஞ்ச் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று காலை துவங்கி நடைபெற்று கொண்டிருந்தது, அப்போது ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் கணிசமான ஓட்டு வித்தியாசத்தில் முன்னிலை வகித்தபோது, பரோசந்த்கர் கிராமத்தில் வெடிகுண்டு வெடித்தது. வெடிகுண்டு வெடித்ததில் 4 ஆம் வகுப்பு மாணவியான தமன்னா கதுன் என்ற அந்த குழந்தை பலத்த காயம் அடைந்து உயிரிழந்தது.

இந்த சம்பவம் மாநிலத்தில் அரசியல் பதட்டங்களை மீண்டும் தூண்டியுள்ளது, வழக்கமான ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் போது வன்முறையை துாண்டும் என்று திரிணாமுல் மீது பா.ஜ., குற்றம் சாட்டியுள்ளது.

பா.ஜ., ஐ.டி., செல் தலைவர் அமித் மாளவியா கூறியதாவது:

டி.எம்.சி.யின் கொண்டாட்டம் மீண்டும், ரத்தத்துடன் முடிகிறது. ஆளும் கட்சியின் வெற்றி ஊர்வலத்தின் போது குண்டுகள் வீசப்பட்டது, அதைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தில் சிறுமி உயிரிழந்தார்.

இவ்வாறு அமித் மாளவியா கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us