Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/தடை செய்யப்பட்ட சீன மாஞ்சா கயிறுகள் பறிமுதல்: டில்லியில் 2 பேர் கைது

தடை செய்யப்பட்ட சீன மாஞ்சா கயிறுகள் பறிமுதல்: டில்லியில் 2 பேர் கைது

தடை செய்யப்பட்ட சீன மாஞ்சா கயிறுகள் பறிமுதல்: டில்லியில் 2 பேர் கைது

தடை செய்யப்பட்ட சீன மாஞ்சா கயிறுகள் பறிமுதல்: டில்லியில் 2 பேர் கைது

ADDED : ஜூன் 28, 2025 05:40 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி: டில்லியின் கம்லா மார்க்கெட் பகுதியில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில் 1000 ரோல்களுக்கும் மேல் தடை செய்யப்பட்ட சீன மாஞ்சா கயிறுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

டில்லியில் சீனாவின் மாஞ்சா கயிறுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சீனா மாஞ்சா கயிறால் ஒரு இளைஞர் முகம் வெட்டப்பட்டது மற்றும் நேற்று இரவு ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து காவல்துறை உஷார்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நகரில் நடத்தப்பட்ட சோதனையில் 1000 ரோல்களுக்கும் மேல் சீனா மாஞ்சா கயிறுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து டில்லியின் டி.சி.பி. விக்ரம் சிங் கூறியதாவது:

இன்று டில்லியின் குற்றப்பிரிவு பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

தடைசெய்யப்பட்ட சீன மாஞ்சா விற்பனையைத் தடுக்க, டில்லி காவல்துறையின் குற்றப்பிரிவு இரண்டு வெவ்வேறு இடங்களில் சோதனை நடத்தி மொத்தம் 1170 ரோல்களைக் கைப்பற்றியுள்ளது. இருவர் கைது செய்யப்பட்டனர்.வரவிருக்கும் சுதந்திர தினம் மற்றும் ரக்ஷாபந்தன் காரணமாக யாரும் உயிரிழக்காமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விக்ரம் சிங் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us