இடுக்கியில் சுற்றுலாவுக்கு விடுக்கப்பட்ட தடை 'வாபஸ்' * நீர்நிலை சுற்றுலா, சாகச பயணம் தடை நீடிப்பு
இடுக்கியில் சுற்றுலாவுக்கு விடுக்கப்பட்ட தடை 'வாபஸ்' * நீர்நிலை சுற்றுலா, சாகச பயணம் தடை நீடிப்பு
இடுக்கியில் சுற்றுலாவுக்கு விடுக்கப்பட்ட தடை 'வாபஸ்' * நீர்நிலை சுற்றுலா, சாகச பயணம் தடை நீடிப்பு

'வாபஸ்':
மாவட்டத்தில் பெய்த கனமழையை கருத்தில் கொண்டு பாதுகாப்பு கருதி சுற்றுலா பகுதிகளை மூடவும், அது தொடர்பான செயல்பாடுகளுக்கு தடை விதித்தும் மாவட்ட நிர்வாகம் மே 29ல் உத்தரவிட்டது. தற்போது மழை குறைந்ததால் தடை உத்தரவு 'வாபஸ்' பெறப்பட்டது. அதே சமயம் நீர்நிலைச் சுற்றுலா, சாகச பயணம் ஆகியவற்றிற்கான தடை நீடிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி படகு சவாரி, டிரெக்கிங், சாகச பயணம் ஆகியவை நிறுத்தி வைக்கப்பட்டன. இரவிகுளம் தேசிய பூங்கா, வனத்துறை, சுற்றுலாத்துறை, ஹைடல் டூரிசம் சார்பிலான பூங்காக்கள் நேற்று திறக்கப்பட்டன.
நீர்மட்டம் உயர்வு:
மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க இடுக்கி அணையில் 35 ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு மே மாதத்தில் நீர்மட்டம் உயர்ந்தது. அதன் உயரம் 554 அடி. குறிப்பாக மே மாதம் கோடை காலம் என்பதால் நீர்மட்டம் அதிகரிப்பது அரிது. இதற்கு முன்னர் 1990ல் மே 31ல் நீர்மட்டம் 225 அடியாக இருந்தது. அதே நாளில் இந்தாண்டு 225.3 அடியாக இருந்தது. இதே நாளில் கடந்தாண்டு நீர் மட்டம் 177.28 அடியாக இருந்தது. இந்தாண்டு கோடை மழை நன்கு கை கொடுத்த நிலையில், பருவ மழை வழக்கத்தை விட முன்கூட்டியே துவங்கி, கனமழையாக மாறியது. அதனால் இந்தாண்டு மே மாதத்தில் அணை நீர் மட்டம் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.