இலங்கை, வங்கதேசம், நேபாளம் போல இந்தியாவிலும் வன்முறையை துாண்ட முயற்சி; மோகன் பகவத் எச்சரிக்கை
இலங்கை, வங்கதேசம், நேபாளம் போல இந்தியாவிலும் வன்முறையை துாண்ட முயற்சி; மோகன் பகவத் எச்சரிக்கை
இலங்கை, வங்கதேசம், நேபாளம் போல இந்தியாவிலும் வன்முறையை துாண்ட முயற்சி; மோகன் பகவத் எச்சரிக்கை

கவனம் தேவை
அண்டை நாடுகளில் அசாதாரணமான சூழல் நிலவுவது நல்லதல்ல. இலங்கை, வங்கதேசம், சமீபத்தில் நேபாளம் என நம் அண்டை நாடுகளில் அடுத்தடுத்து வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இவை அனைத்தும் மக்களின் ஆவேசத்தால் நடந்தவை.
தீய அலை
தீய மற்றும் எதிர்ப்பு சித்தாந்தங்கள் கொண்ட புதிய அலை உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக சர்வதேச நாடுகளில் சமூக உறுதியற்ற தன்மை மற்றும் சீர்குலைவை
சுதேசி, தற்சார்பு முக்கியம்
அமெரிக்கா புதிய வரி கொள்கையை வகுத்துள்ளது. சொந்த நாட்டு மக்களின் நலனுக்காக அந்த கொள்கை வகுக்கப்பட்டாலும், ஒவ்வொருவரையும் பாதித்து வருகிறது. எந்த நாடும் தனிமையில் வாழ முடியாது. ஒன்றுக்கொன்று சார்ந்து அல்லது துாதரக நம்பிக்கைகள் மூலம் முன்னேற்றம் அடைந்து வருகின்றன.
வசுதைவ குடும்பகம்
ஹிந்து சமூகம் அனைவரையும் உள்ளடக்கிய உள்ளார்ந்த சமூகம். பிரித்து பார்க்கும் மனநிலை ஹிந்து சமூகத்திடம் இல்லை. 'வசுதைவ குடும்பகம்' என்ற, 'உலகமே ஒரு குடும்பம்' என்ற சித்தாந்தத்தை காத்து வருவதும் ஹிந்து சமூகம் தான். தேசிய வளர்ச்சிக்கு சமூகத்தின் ஒற்றுமை மிகவும் முக்கியம். அதுவும் பன்மொழிகள், மதங்கள், வாழ்க்கை முறைகள் என நிறைய வேற்றுமைகள் நிறைந்த இந்தியாவுக்கு மிகவும் அவசியம்.
சட்டத்தை கையில் எடுப்பது, அற்ப விஷயங்களுக்காக வன்முறையில் ஈடுபடும் போக்கு ஆகியவை கண்டனத்துக்குரியது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை துாண்டுவதற்காக வேண்டுமென்றே வலிமையை காட்டுவது அல்லது அப்படியொரு மோசமான சதி வலையில் வீழ்வது, நிச்சயம் தீய விளைவுகளையே ஏற்படுத்தும்.


