Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஸ்கூட்டர் மீது கார் மோதி விபத்து தாய் பலி ; மகன், மகள் படுகாயம்

ஸ்கூட்டர் மீது கார் மோதி விபத்து தாய் பலி ; மகன், மகள் படுகாயம்

ஸ்கூட்டர் மீது கார் மோதி விபத்து தாய் பலி ; மகன், மகள் படுகாயம்

ஸ்கூட்டர் மீது கார் மோதி விபத்து தாய் பலி ; மகன், மகள் படுகாயம்

ADDED : அக் 03, 2025 05:43 AM


Google News
கோட்டக்குப்பம்: கோட்டக்குப்பம் அரு கே ஸ்கூட்டர் மீது, கார் மோதிய விபத்தில் பெண் இறந்தார். மகன், மகள் காயமடைந்தனர்.

புதுச்சேரி அடுத்த கணபதிசெட்டிக்குளம் கோவிந்தசாமி நகரைச் சேர்ந்தவர் விஜயானந்த் மனைவி சுபா, 37; இவர்களின் மகள் வர்ஷா, 16; மகன் ஹர்ஜித்,10.

நேற்று முன்தினம் மாலை சுபா தனது மகன், மகளை ஸ்கூட்டரில் ஏற்றிக் கொண்டு கீழ்புத்துப்பட்டு பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றார். இ.சி.ஆரில் கீழ்புத்துப்பட்டு மாதாகோவில் சந்திப்பில் சென்றபோது, பின்னால் வந்த கார், சுபா ஓட்டிச் சென்ற ஸ்கூட்டர் மீது மோதியது.

இதில் காயமடைந்த மூவரும் பிம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சுபா நேற்று முன்தினம் இரவு இறந்தார்.

விபத்து குறித்து கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us