சட்டசபையை கலைத்து தேர்தலை சந்திக்க தயாரா? சித்தராமையாவுக்கு எடியூரப்பா சவால்!
சட்டசபையை கலைத்து தேர்தலை சந்திக்க தயாரா? சித்தராமையாவுக்கு எடியூரப்பா சவால்!
சட்டசபையை கலைத்து தேர்தலை சந்திக்க தயாரா? சித்தராமையாவுக்கு எடியூரப்பா சவால்!

விலைவாசி உயர்வு
காங்கிரசின் பண பலம், ஆட்சி பலம் என பல முயற்சிகளை மீறி, மக்கள் பா.ஜ.,வுக்கு ஓட்டு போட்டு உள்ளனர். கர்நாடகாவில் தற்போது சட்டசபை தேர்தல் நடந்தால், பா.ஜ., 130 - 135 இடங்களில் வெற்றி பெறும். லோக்சபா தேர்தலில், எங்களின் தவறால், சில இடங்களில் பின்னடைவை சந்தித்தோம். ஆனால், மக்கள் தெளிவாக, காங்கிரசுக்கு எதிராக ஓட்டு போட்டுள்ளனர்.
சட்டம் - ஒழுங்கு
மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு, விதான் சவுதாவில் பாகிஸ்தான் ஆதரவு கோஷம் என பல சம்பவங்கள் நடந்தள்ளன. வால்மீகி ஆணையத்தின் முறைகேடுக்கு பின், மைசூரு நகர மேம்பாட்டு வாரிய முறைகேடு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதில் முதல்வரின் குடும்பத்தினருக்கு தொடர்பு உள்ளது.
ராஜினாமா
சித்தராமையா, சிவகுமார் ஆகியோர் ஆட்சியில் தொடரும் தார்மீகத்தை இழந்துவிட்டனர். முதல்வராக தொடர சித்தராமையாவுக்கு உரிமையில்லை. உங்களுக்கு தைரியம் இருந்தால், சட்டசபையை கலைத்துவிட்டு, தேர்தலை சந்தியுங்கள். இந்திராவால் கூட, தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக முடியவில்லை.