நிதிச்சுமையால் திண்டாட்டம்: வரிச்சலுகை கேட்கிறார் சந்திரபாபு
நிதிச்சுமையால் திண்டாட்டம்: வரிச்சலுகை கேட்கிறார் சந்திரபாபு
நிதிச்சுமையால் திண்டாட்டம்: வரிச்சலுகை கேட்கிறார் சந்திரபாபு
ADDED : ஜூலை 05, 2024 05:20 AM

புதுடில்லி: புதுடில்லியில் பிரதமர் மோடியை சந்தித்த ஆந்திர முதல்வர் சந்திபாபு நாயுடு மாநிலத்திற்கு வரிச்சலுகை வழங்க வலியுறுத்தினார்.
ஆந்திர மாநிலம் நிதிச்சுமையால் திண்டாடி வருகிறது. புதுடில்லியில் நேற்று பிரதமர் மோடியை சந்திரபாபு சந்தித்தார். முக்கிய பிரச்னைகள் குறித்து இருவரும் ஆலோசித்தனர். ஆந்திர மாநிலத்திற்கு வரி சலுகை வழங்க வேண்டும் என வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயலையும் சந்திரபாபு சந்தித்தார். இன்று நிதியமைச்சர் நிர்மலாவை சந்தித்து பேச உள்ளார். அவரது கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வாய்ப்பு உள்ளது என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.