அதானி விவகாரம்: கோட்டக், செபி மீது பாய்ந்த ஹிண்டன்பர்க்
அதானி விவகாரம்: கோட்டக், செபி மீது பாய்ந்த ஹிண்டன்பர்க்
அதானி விவகாரம்: கோட்டக், செபி மீது பாய்ந்த ஹிண்டன்பர்க்

செபியின் குற்றச்சாட்டு
'கிங்டன் கேப்பிடல் மேனேஜ்மென்ட்' எனும் நிறுவனமும், ஹிண்டன்பர்க் நிறுவனமும் இணைந்து, அதானி குழும நிறுவனங்களின் பங்கு விலையில் குறிப்பிடத்தக்க சரிவை ஏற்படுத்தி, லாபத்தை பகிர்ந்து கொண்டுள்ளதாக செபி தெரிவித்துள்ளது.
ஹிண்டன்பர்கின் பதில்
அதானி குழுமத்தின் மீதான எங்களுடைய முதலீடு முயற்சி அனைவரும் அறிந்ததே. மேலும், கிங்டன் உடன் இணைந்து நாங்கள் ஈட்டிய லாபம், வெறும் 34 கோடி ரூபாய் மட்டுமே. இதிலும் அதானி குழுமம் தொடர்பான ஆராய்ச்சிக்கான செலவு போக, எங்களுக்கு கிடைத்த லாபம், மிகக் குறைவு.
கோட்டக் மறுப்பு
இந்நிலையில் ஹிண்டன்பர்க் தங்களுடைய வாடிக்கையாளரே இல்லை என்று, கோட்டக் தெரிவித்துள்ளது. மேலும் ஹிண்டன்பர்க் குறிப்பிட்டுள்ள பண்டு திட்டம், செபியில் பதிவு செய்யப்பட்ட திட்டம் என்று தெரிவித்துள்ள கோட்டக், இத்திட்டத்தில் முதலீட்டாளர்களை இணைக்கும் போது, முறையான கே.ஒய்.சி., விதிகள் பின்பற்றப்படுவதாக கூறியுள்ளது.