தனக்கு தானே பிரசவம் பார்த்த இளம்பெண் பிறந்த சிறிது நேரத்தில் உயிரிழந்த குழந்தை
தனக்கு தானே பிரசவம் பார்த்த இளம்பெண் பிறந்த சிறிது நேரத்தில் உயிரிழந்த குழந்தை
தனக்கு தானே பிரசவம் பார்த்த இளம்பெண் பிறந்த சிறிது நேரத்தில் உயிரிழந்த குழந்தை
ADDED : ஜன 07, 2024 02:45 AM
துமகூரு : திருமணம் ஆவதற்கு முன்பே கருவுற்றதால், தனக்கு தானே இளம்பெண் பிரசவம் பார்த்தார். பிறந்த சிறிது நேரத்தில் குழந்தை இறந்தது.
துமகூரு அரேகுஜ்ஜனஹள்ளி கிராமத்தில் நேற்று முன்தினம் காலை, பச்சிளம் பெண் குழந்தை இறந்து கிடந்தது. அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அங்கு சென்ற அதிகாரிகள் குழந்தை உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். குழந்தை தாய் யார், எப்படி இறந்தது என்று தெரியவில்லை.
இந்நிலையில் கிராமத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண், அதிக ரத்தப் போக்கால் மயங்கிக் கிடப்பதாக, அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில், இறந்த குழந்தை, இந்த இளம்பெண்ணுக்கு பிறந்தது என்பது தெரிந்தது. அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. வாலிபர் ஒருவரை நம்பி மோசம் போனதும், பெற்றோர் இல்லாததால் அக்கா வீட்டில் வசித்ததும் தெரிந்தது.
கர்ப்பமாக இருப்பது, பக்கத்து வீட்டினருக்கு தெரியாமல் இருப்பதற்காக, தளர்வான ஆடைகளை அணிந்து சமாளித்ததும், பிரசவ வலி ஏற்பட்டதால் யாருக்கும் தெரியாமல், ஒதுக்குப்புறமான இடத்திற்குச் சென்று பிரசவம் பார்த்துவிட்டு, குழந்தையை அங்கேயே போட்டுவிட்டு வீட்டிற்குச் சென்றதும், குழந்தை இறந்ததும் தெரிந்தது. இளம்பெண் மீது துமகூரு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.