உ.பி.யில் ஆன்மிக நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 122 பக்தர்கள் பலி
உ.பி.யில் ஆன்மிக நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 122 பக்தர்கள் பலி
உ.பி.யில் ஆன்மிக நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 122 பக்தர்கள் பலி

யோகி ஆதித்யநாத் இரங்கல்
கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய, தேவையான சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி இரங்கல்
பார்லிமென்ட்டில் நடைபெற்று வரும் விவாதத்தில் பங்கேற்று உரையாற்றி வரும் மோடி உ.பி.,யில் ஆன்மிக நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி பலியனாவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக தெரிவித்தார்.
ஜனாதிபதி இரங்கல்
உ.பி.,யில் ஆன்மிக நிகழ்ச்சி கூட்ட நெரிசலில் சிக்கிய பலியானவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
ஆன்மிக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக காங்.., தலைவர் ராகுல் மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.