Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/அஜித்பவார் கட்சியினர் 4 பேர் சரத்பவார் கட்சியில் ஐக்கியம்: யாருக்கு பின்னடைவு?

அஜித்பவார் கட்சியினர் 4 பேர் சரத்பவார் கட்சியில் ஐக்கியம்: யாருக்கு பின்னடைவு?

அஜித்பவார் கட்சியினர் 4 பேர் சரத்பவார் கட்சியில் ஐக்கியம்: யாருக்கு பின்னடைவு?

அஜித்பவார் கட்சியினர் 4 பேர் சரத்பவார் கட்சியில் ஐக்கியம்: யாருக்கு பின்னடைவு?

UPDATED : ஜூலை 17, 2024 05:30 PMADDED : ஜூலை 17, 2024 05:28 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

மும்பை: தேசிய வாத காங்கிரஸ் அஜித் பவார் அணியின் 4 முக்கிய தலைவர்கள் இன்று (ஜூலை 17) சரத் பவார் அணியில் இணைந்தனர். சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ளதால், அஜித் பவாருக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2023ம் ஆண்டு அஜித் பவார் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் சரத் பவாரிடமிருந்து பிரிந்ததால் தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டு அணியாக பிளவுபட்டது. அஜித் பவார் ஏக்நாத் ஷிண்டே கூட்டணியில் இணைந்தார். அவர் மஹா., மாநில துணை முதல்வர் ஆனார்.

நடந்த முடிந்த லோக்சபா தேர்தலில் மஹாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் மஹா விகாஸ் அகாதி கூட்டணி (காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா, சரத் பவார் தலைமையிலான என்சிபி) 30 தொகுதிகளை கைப்பற்றியது.

லோக்சபா தோல்வி காரணமாக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஜித் பவாரின் ஆதரவாளர்கள் அஜித் காவ்ஹானே உட்பட 4 பேர் சரத்பவார் கட்சியில் இணைந்தனர். இது குறித்து தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) அணியின் தலைவர் சுப்ரியா சுலே கூறியதாவது:

மஹா., மாநிலத்திற்காக கடந்த 60 ஆண்டுகளாக சரத் பவார் பணியாற்றி வருகிறார். அவரின் கொள்கை மீது நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். எதிர்க்கட்சியினர் கூட பலர் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளனர், அதனால் தான் எங்களுடன் மீண்டும் இணைகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us