இந்திய குடியுரிமையை விட்டுத் தந்து வெளிநாட்டில் குடியேறிய 2.16 லட்சம் பேர்: இவர்களில் சிலர் கோடீஸ்வரர்கள்
இந்திய குடியுரிமையை விட்டுத் தந்து வெளிநாட்டில் குடியேறிய 2.16 லட்சம் பேர்: இவர்களில் சிலர் கோடீஸ்வரர்கள்
இந்திய குடியுரிமையை விட்டுத் தந்து வெளிநாட்டில் குடியேறிய 2.16 லட்சம் பேர்: இவர்களில் சிலர் கோடீஸ்வரர்கள்

கவலை
ராஜ்யசபாவில் ஆம் ஆத்மி எம்.பி., ராகவ் சத்தா பேசும் போது, ஏராளமானோர் இந்திய குடியுரிமையை விட்டுக் கொடுப்பது பற்றியும், இந்திய குடியுரிமை விண்ணப்பங்கள் குறைந்தளவே ஏற்கப்படுவது குறித்தும் கவலை தெரிவித்தார். இதற்கான காரணங்கள் குறித்து அரசு விசாரணை நடத்தியதா என்பது கேள்வி எழுப்பினார்.
பதில்
இதற்கு மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வரதன் சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: 2023ம் ஆண்டு 2,16,219 லட்சம் பேர் இந்திய குடியுரிமையை விட்டுத் தந்துவிட்டு வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டனர்.
வெளிநாடுகளுக்கு இடம்பெயரும் கோடீஸ்வரர்கள்
ஹென்லே நிறுவனத்தின் அறிக்கைப்படி இந்தாண்டு 4,300 கோடீஸ்வரர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவார்கள் என கூறப்பட்டு உள்ளது. கடந்தாண்டு இந்த எண்ணிக்கை 5,100 ஆக இருந்தது. தாய்நாட்டை விட்டு வெளிநாட்டிற்கு செல்லும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியா முக்கிய இடத்தில் உள்ளது.