Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/தொழிலதிபரை காரில் கடத்தி ரூ.7 லட்சம் பறித்த 2 பேர் கைது

தொழிலதிபரை காரில் கடத்தி ரூ.7 லட்சம் பறித்த 2 பேர் கைது

தொழிலதிபரை காரில் கடத்தி ரூ.7 லட்சம் பறித்த 2 பேர் கைது

தொழிலதிபரை காரில் கடத்தி ரூ.7 லட்சம் பறித்த 2 பேர் கைது

ADDED : ஜன 12, 2024 11:04 PM


Google News
Latest Tamil News
பெங்களூரு: பெங்களூரில் தொழிலதிபரை மிரட்டி, பணம் பறித்த யூ.பி.எஸ்.சி., தேர்வுக்கு தயாராகி வந்த இளைஞர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக, நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா அளித்த பேட்டி:

பெங்களூரு ராஜாஜி நகரை சேர்ந்தவர்சேத்தன் ஷா. 2023ல் செயின்ட் ஜோசப் பல்கலைக்கழகத்தில், தனது மகளுக்கு பி.பி.ஏ., படிப்புக்கு இடம் பெற முயன்று கொண்டிருந்தார்.

அப்போது, சேத்தன் ஷாவின் மகளின் நண்பர் மூலம், சச்சின் அறிமுகமானார். இவர், யூ.பி.எஸ்.சி., தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தார். தனக்கு செயின்ட் ஜோசப் பல்கலைக் கழகத்தில் அறிமுகம் இருப்பதாகவும், அவருக்கு சீட் வாங்கித் தருவதாகவும் கூறினார். இதற்காக, தனக்கு 4 லட்சம் ரூபாய் வேண்டும் என்றார்.

ஆனால், சீட் வாங்கிக் கொடுக்காமல், நாட்களை கடத்தி வந்தார். இதனால், சேத்தன் ஷா, வேறொருவர் மூலம் தன் மகளுக்கு சீட் வாங்கினார்.

சில நாட்களுக்கு பின், சேத்தன் ஷாவுக்கு போன் செய்த சச்சின், 'உங்கள் மகளுக்கு சீட் கிடைக்க நான் தான் காரணம். எனக்கு தர வேண்டிய 4 லட்சம் ரூபாய் தாருங்கள்' என கேட்டுள்ளார். இதற்கு சேத்தன்ஷா சம்மதிக்கவில்லை.

இதனால் கோபமடைந்த சச்சின், பல்வேறு நபர்கள் மூலம், சேத்தன் ஷாவுக்கு மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.

கடந்த 5ம் தேதி பீன்யாவில் தனது தொழிற்சாலையில் இருந்து வீட்டுக்கு சேத்தன் ஷா திரும்பிக் கொண்டிருந்தார்.

ராஜாஜி நகர் சிக்னல் அருகே வந்தபோது, சச்சின், அவரது நண்பர் நண்பர்கள் ஆகியோர், அதே காரில் சேத்தனை கடத்திச் சென்றனர்.

“சீட் வாங்கிக் கொடுத்தால், 4 லட்சம் ரூபாய் தருவதாக கூறினீர்கள். அதற்கு வட்டியாக 2 லட்சம் ரூபாய், எனது நண்பர்களுக்கு 1 லட்சம் ரூபாய் சேர்த்து 7 லட்சம் ரூபாய் தர வேண்டும்,” என மிரட்டினார்.

அப்போது, சேத்தன் ஷா மூலம், அவரது மனைவிக்கு போன் செய்து, தனது நண்பர் வீட்டுக்கு வருவார். அவரிடம், 7 லட்சம் ரூபாய் கொடுக்கும்படி பேசவைத்துள்ளார்.

அதுபோன்று, அவரது வீட்டுக்கு சென்ற ஒருவர், பணமும் பெற்றுள்ளார். பின், மதியம் 2:00 மணியளவில், சேத்தன் ஷாவை, புறநகர் பகுதியில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.

உடனடியாக, ராஜாஜி நகரில் சேத்தன் ஷா புகார் அளித்தார்.

வழக்குப் பதிவு செய்த போலீசார், சச்சின், 30, அவரது நண்பர் கவுரி சங்கர், 33, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us