சுற்றுலா பயணியரின் சொர்க்க பூமி உடுப்பி
சுற்றுலா பயணியரின் சொர்க்க பூமி உடுப்பி
சுற்றுலா பயணியரின் சொர்க்க பூமி உடுப்பி

கிருஷ்ணர் மடம்
உடுப்பி நகரில் கிருஷ்ணர் மடம் உள்ளது. இது மிகவும் அற்புதமான புராதன கோவிலாகும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, மடத்தில் நடக்கும் திருவிழா மிகவும்பிரசித்தி பெற்றதாகும்.
செயின்ட் மேரீஸ் தீவு
மல்பே கடற்கரையில் இருந்து, படகில் ஒரு மணி நேரம் பயணித்தால், செயின்ட் மேரீஸ் தீவை அடையலாம். மிகவும் அற்புதமான தீவாகும். இது சுற்றுலா பயணியரின் சொர்க்கமாகும். இந்த தீவுக்கு படகில் செல்வது, மறக்க முடியாத அற்புத அனுபவமாக இருக்கும்.
காபு லைட் ஹவுஸ்
மங்களூரில் இருந்து, உடுப்பிக்கு வரும் போது வழியில் படுபிதரே கடற்கரையை கடந்து சென்றால், காபு லைட் ஹவுசை காணலாம். மிகவும் அழகான கடற்கரை, சுற்றுலா தலங்கள், லைட் ஹவுஸ் உள்ள இடம் காபு. லைட் ஹவுசை காண, பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர்.
கொல்லுார் மூகாம்பிகை
உடுப்பியின், கொல்லுாரில் உள்ள மூகாம்பிகை கோவில், தென்னகத்தின் பக்தர்களை ஈர்க்கும் கோவிலாகும். தமிழகம், கேரளா, ஆந்திரா உட்பட, பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பக்தர்கள் வருகின்றனர்.
ஒத்தினெஜே கடற்கரை
உடுப்பியின், பைந்துாரில் ஒத்தினெஜே கடற்கரை உள்ளது. இங்குள்ள கடலை, 'சோமேஸ்வர கடல்' என, அழைக்கின்றனர். இப்பகுதியின் மேற்கு திசையில் அரபிக்கடல்; கிழக்கு திசையில் சுமனா ஆறு ஓடுகிறது. இவை இரண்டும் கலக்கும் இடத்தில், அழகான தீவு உருவாகியுள்ளது.
கமலஷிலே கோவில்
உடுப்பியின், குந்தாபுராவில் இருந்து 35 கி.மீ., தொலைவில் கமலஷிலே கோவில் உள்ளது. இது உயரமான மலை, சுற்றிலும் வனப்பகுதி நடுவில் இந்த கோவில் உள்ளது. கோவில் அருகில் பாயும் புக்ஜா ஆறு, கமலஷிலே அழகை அதிகரிக்கிறது. கமலஷிலே என்பது, புராதனமான பிராம்ஹி துர்கா பரமேஸ்வரி கோவில்.
ஆகும்பே சன்செட்
ஆகும்பே மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு சிறிய கிராமம். பெங்களூரில் இருந்து 350 கி.மீ., தொலைவில் உள்ளது. ஆகும்பே மேகாலயாவின் சிரஞ்சீவிக்கு பின், அதிகமான மழை பெய்யும் இடமாகும். எனவே இதனை கர்நாடகாவின், சிரபுஞ்சி என, அழைக்கின்றனர்.
கூட்லு தீர்த்தா
உடுப்பி - ஆகும்பே சாலையின், ஹெப்ரி அருகில் கூட்லு தீர்த்தா நீர் வீழ்ச்சி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளின், அடர்ந்த கானகத்தின் நடுவில் பாயும் சீதா ஆற்றில் இருந்து உருவானது கூட்லு தீர்த்தா.