பிரதமரை சந்தித்தார் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி
பிரதமரை சந்தித்தார் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி
பிரதமரை சந்தித்தார் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி
UPDATED : ஜூலை 04, 2024 08:40 PM
ADDED : ஜூலை 04, 2024 08:36 PM

புதுடில்லி: ஆந்திர முதல்வரை தொடர்ந்து, தெலுங்கானா காங்., முதல்வர் ரேவந்த் ரெட்டி, இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது தெலுங்கானா மாநில வளர்ச்சிப் பணிகளுக்கான பல்வேறு திட்டங்கள் குறித்தும், ஐதராபாத் நகரில் மத்திய பல்கலைகழகம் , மற்றும் ஐஐஎம். அமைப்பதற்கான நிலம் ஒதுக்குவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.முன்னதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பிரதமரை சந்தித்து பேசியதும் குறிப்பிடத்தக்கது.