Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ மாணவி பலாத்காரம் தொழிலதிபர் ஓட்டம்

மாணவி பலாத்காரம் தொழிலதிபர் ஓட்டம்

மாணவி பலாத்காரம் தொழிலதிபர் ஓட்டம்

மாணவி பலாத்காரம் தொழிலதிபர் ஓட்டம்

ADDED : ஜூன் 02, 2024 09:35 PM


Google News
உடுப்பி: பள்ளி, கல்லுாரி மாணவியரை பாலியல் பலாத்காரம் செய்து, அதை வீடியோ எடுத்து பிளாக் மெயில் செய்தவரை போலீசார் தேடுகின்றனர்.

உடுப்பி குந்தாபுராவில் வசிப்பவர், தொழிலதிபர் ஸ்ரேயஸ் நாயக், 25. இவர் பள்ளி, கல்லுாரி மாணவியரை 'குறி' வைப்பார். இவர்களை வலையில் விழ வைத்து, பாலியல் பலாத்காரம் செய்வார். இதை வீடியோவில் பதிவு செய்து, அவர்களை மிரட்டுவார்.

உயர்நிலைப் பள்ளி மாணவி ஒருவரிடம், ஓராண்டுக்கு முன் அறிமுகம் செய்து கொண்டார். சிறுமியை ஹாலாடி சாலையின், ஹெக்கொட்லுவில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்து சென்றார்.

காரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். இதை மொபைல் போனில் வீடியோ எடுத்தார். இதை காண்பித்து மிரட்டி, பல நாட்களாக பலாத்காரம் செய்துள்ளார்.

இதில் சிறுமி கர்ப்பமடைந்தார். பெற்றோர் விசாரித்த போது நடந்ததை கூறினார். இது குறித்து, மே 18ல் ஸ்ரேயஸ் நாயக் மீது, குந்தாபுராவின், அமாவாசைபைலு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீசாரும் 'போக்சோ' சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளனர். வழக்கு பதிவானதும் ஷ்ரேயஸ் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடுகின்றனர்.

இவர் போலீசாரிடம் சிக்கினால்தான், இவரால் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டனர் என்பது தெரியும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us