Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ இருதரப்பு உறவை வலுப்படுத்தணும்: நேபாளத்தின் புதிய பிரதமர் சர்மாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

இருதரப்பு உறவை வலுப்படுத்தணும்: நேபாளத்தின் புதிய பிரதமர் சர்மாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

இருதரப்பு உறவை வலுப்படுத்தணும்: நேபாளத்தின் புதிய பிரதமர் சர்மாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

இருதரப்பு உறவை வலுப்படுத்தணும்: நேபாளத்தின் புதிய பிரதமர் சர்மாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ADDED : ஜூலை 15, 2024 01:07 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: நேபாளத்தின் புதிய பிரதமர் சர்மாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நேபாள நாட்டின் பார்லிமென்டில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் பிரசண்டா தோல்வி அடைந்தார். இதையடுத்து அதிபரைச் சந்தித்த கே.பி.சர்மா ஒலி, தனது தலைமையில் ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்தார். இந்நிலையில், இன்று (ஜூலை 15) நேபாளத்தின் புதிய பிரதமர் ஆக சர்மா ஒலி பதவியேற்றார்.

இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: : நேபாளத்தின் புதிய பிரதமர் சர்மாவுக்கு வாழ்த்துக்கள். இரு நாடுகளுக்கிடையேயான உறவை மேலும் வலுப்படுத்த வேண்டும். நமது மக்களின் முன்னேற்றம் மற்றும் செழுமைக்காக நமது பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த வேண்டும். இவ்வாறு மோடி கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us