ADDED : செப் 14, 2025 03:25 AM
புதுடில்லி:சுகாதாரத் துறை அமைச் சர் பங்கஜ் சிங் கூறியதாவது :
டில்லி மாநகர் முழுதும் போலி மருந்து புழக்கத்தை தடுக்க நான்கு சிறப்புக் குழுக்களை அரசு அமைக்கிறது. இந்தக் குழுவினர் நள்ளிரவில் குறிப்பாக மருத்துவமனைகள் மற்றும் மருந்துக் கடைகளில் சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
போலி மருந்து புழக்கம் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.