கனமழையால் ஆறுகளில் வெள்ள பெருக்கு கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம்
கனமழையால் ஆறுகளில் வெள்ள பெருக்கு கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம்
கனமழையால் ஆறுகளில் வெள்ள பெருக்கு கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம்
இடிந்து விழுந்த வீடு
கடலோர மாவட்டங்களில், பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்துள்ளது.
படகு மூலம் மீட்பு
கார்வாரின் சண்டியா, கோல் சண்டியா பகுதிகளில் உள்ள தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் உள்ள 5 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அங்குள்ள மக்களை படகு மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
காவிரி ஆற்றில் வெள்ளம்
இதனால், காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மடிகேரியில் இருந்து, காலிபீடு கிராமத்துக்கு செல்லும் வழியில் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்ததால், ஆறு கார்கள் சேதமடைந்துள்ளன.
நிலச்சரிவு
ஷிவமொகா மாவட்டம், தீர்த்தஹள்ளி அடுத்த ஆகும்பேவில் தொடர் மழையால், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
விடுமுறை அறிவிப்பு
இது போன்று, தட்சிண கன்னடாவின் மங்களூரு, குக்கே சுப்பிரமணியா, பெல்தங்கடி, பன்ட்வால் பகுதியிலும் மழை பெய்து வருவதால், நேத்ராவதி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. கன மழையால், தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டங்களுக்கு இன்று பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.