Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ ஆட்டோ கவிழ்ந்து ஆறு பேர் காயம்

ஆட்டோ கவிழ்ந்து ஆறு பேர் காயம்

ஆட்டோ கவிழ்ந்து ஆறு பேர் காயம்

ஆட்டோ கவிழ்ந்து ஆறு பேர் காயம்

ADDED : ஜூன் 24, 2024 04:39 AM


Google News
Latest Tamil News
உடுப்பி, : ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, ஆற்றில் கவிழ்ந்தது; ஆறு பேர் காயமடைந்தனர்.

உடுப்பியின் ஸ்ரீகிருஷ்ணர் மடம் அருகில் கல்சங்கா சாலையில் உள்ள இந்திராணி ஆற்றின் அருகே, நேற்று மதியம் பயணியருடன் ஒரு ஆட்டோ வேகமாக சென்றது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ ஆற்றில் கவிழ்ந்தது.

இதை பார்த்த அப்பகுதியினர், விரைந்து உதவிக்கு வந்து ஆட்டோவில் இருந்த பயணியரை காப்பாற்றினர்.

தகவலறிந்து அங்கு வந்த போலீசார், காயமடைந்த ஆறு பயணியரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆட்டோவை மேலே எடுத்தனர். நால்வர் பலத்த காயம் அடைந்து உள்ளனர்.

ஆற்றுக்கு தடுப்பு சுவர் இல்லை. ஆட்டோவில் ஓட்டுனர் அளவுக்கு அதிகமான பயணியரை ஏற்றியதே, விபத்துக்கு காரணம் என, கூறப்படுகிறது. உடுப்பி போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us