Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ ரூ.20,000 கோடி வங்கி மோசடி ஆம்டெக் நிறுவனத்தில் ரெய்டு

ரூ.20,000 கோடி வங்கி மோசடி ஆம்டெக் நிறுவனத்தில் ரெய்டு

ரூ.20,000 கோடி வங்கி மோசடி ஆம்டெக் நிறுவனத்தில் ரெய்டு

ரூ.20,000 கோடி வங்கி மோசடி ஆம்டெக் நிறுவனத்தில் ரெய்டு

ADDED : ஜூன் 21, 2024 01:38 AM


Google News
புதுடில்லி, வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஆம்டெக் நிறுவனம், 20,000 கோடி ரூபாய் வங்கி கடன் மோசடியில் ஈடுபட்ட வழக்கில், அந்நிறுவனத்துக்கு சொந்தமான 35 இடங்களில் நேற்று அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.

டில்லியை தலைமையிடமாக வைத்து ஆம்டெக் ஆட்டோ நிறுவனம் செயல்படுகிறது.

இந்நிறுவனம் பல ஆண்டுகளாக வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு துறையில் உள்ளது. இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் இந்நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்பட்டது.

அதை மறைத்து, போலியான விற்பனை ஆவணங்களை தயாரித்து பல்வேறு வங்கிகளில் 20,000 கோடி ரூபாய் அளவுக்கு நிறுவனத்தின் இயக்குனர்கள் கடன் பெற்றுள்ளனர். அந்த பணத்தை ரியல் எஸ்டேட், வெளிநாடு மற்றும் புதிய தொழில்களில் முதலீடு செய்து மடைமாற்றிஉள்ளனர்.

இந்த மோசடி குறித்து ஆம்டெக் குழுமத்திற்கு எதிராக சி.பி.ஐ., வழக்கு பதிந்தது. வங்கிகள் தரப்பு தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தை அணுகி ஆம்டெக் குழும சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையை துவங்கினர்.

இந்நிலையில் இந்த வழக்கை அமலாக்கத் துறையும் விசாரிக்க வேண்டும் என, சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பின், சி.பி.ஐ., பதிந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறையினர் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்தனர்.

இதையடுத்து, ஆம்டெக் குழும நிறுவனர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு சொந்தமான டில்லி, குருகிராம், நொய்டா, மும்பை, நாக்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.

சோதனையில், போலி நிறுவனங்கள் பெயரில் ஆயிரக்கணக்கான கோடி சொத்துகள் பதுக்கி இருப்பதையும், வெளிநாடுகளில் ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதையும் அமலாக்கத் துறையினர் கண்டறிந்தனர். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us