பிரேத பரிசோதனை செய்த மருத்துவரிடம் ரூ.1 கோடி பேரம்? விசாரணையில் நாளுக்கு நாள் அதிர்ச்சி தகவல்
பிரேத பரிசோதனை செய்த மருத்துவரிடம் ரூ.1 கோடி பேரம்? விசாரணையில் நாளுக்கு நாள் அதிர்ச்சி தகவல்
பிரேத பரிசோதனை செய்த மருத்துவரிடம் ரூ.1 கோடி பேரம்? விசாரணையில் நாளுக்கு நாள் அதிர்ச்சி தகவல்

மொபைல் பேச்சு
அப்போது, கொலை செய்த ஒரு நபர், போலீசாரின் மொபைல் போனை வாங்கி, நீண்ட நேரம் பேசி கொண்டிருந்தார். இந்த காட்சிகள், 'டிவி' சேனல்களில் நேற்று ஒளிபரப்பப்பட்டன. தர்ஷனுக்கு சிகரெட், வேறு சிலருக்கு பிரியாணி வாங்கி கொடுத்ததாகவும் கூறப்பட்டது. இதனால், குற்றவாளிகளுக்கு போலீசாரே உதவி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
144 தடை உத்தரவு
மேலும், அன்னபூரனேஸ்வரி நகர் போலீஸ் நிலையம் முன், ஊடகத்தினர், பொது மக்கள் ஏராளமானோர் தினமும் காத்திருக்கின்றனர். உள்ளே என்ன நடக்கிறது என்பது, வெளியில் தெரிய கூடாது என்பதற்காக, யாரும் பார்க்காத வகையில், போலீஸ் நிலையத்தை சுற்றி, 'சாமியானா' பந்தல் மூலம் நேற்று மறைக்கப்பட்டது.
மருத்துவரிடம் பேரம்
ரேணுகாசாமியை தாங்கள் தான் கொலை செய்தோம் என்று சரண் அடைந்தவர்களுக்கு, 30 லட்சம் ரூபாய் தருவதாக தர்ஷன் பேரம் பேசி, 10 லட்சம் ரூபாய் முன் பணமும் தந்தாராம். அந்த பணத்தை பறிமுதல் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
அப்ரூவராகும் தீபக்
இதற்கிடையில், கைது செய்யப்பட்டவர்களில் தீபக் என்பவர், அப்ரூவராக மாறி, கொலை செய்த முழு தகவலையும், புட்டு புட்டு வைத்துள்ளார். எனவே நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி, அவரது வாக்குமூலத்தை பதிவு செய்து, அப்ரூவராகி மாறி உள்ளார் என்பதை காண்பிக்க, போலீசார் திட்டமிட்டுள்ளனர். அடுத்தடுத்த விசாரணையில், இன்னும் என்னென்ன அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என்று பொது மக்கள் பேசி கொள்கின்றனர்.
தர்ஷன் மகன் கவலை
சமூக வலைதளங்களில், தன் தந்தையை கெட்ட வார்த்தைகளால் திட்டுவதை பார்த்து, கவலை அடைந்த நடிகர் தர்ஷன் மகன் வினீஷ், சமூக வலைதளங்களில் நேற்று வெளியிட்ட அறிக்கை: