Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ துப்பாக்கியால் சுட்டு ரவுடியை பிடித்த போலீஸ்

துப்பாக்கியால் சுட்டு ரவுடியை பிடித்த போலீஸ்

துப்பாக்கியால் சுட்டு ரவுடியை பிடித்த போலீஸ்

துப்பாக்கியால் சுட்டு ரவுடியை பிடித்த போலீஸ்

ADDED : ஜூலை 05, 2024 06:14 AM


Google News
Latest Tamil News
தங்கவயல்: தங்கவயல் ஆண்டர்சன்பேட்டை சூசைப்பாளையம் சார்லஸ் மகன் ஸ்டாலின், 32. இவர் மீது கொலை வழக்கு உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் பதிவாகி இருந்தன. இவர், ரவுடி பட்டியலில் இருந்தார்.

சமீபத்தில் கொலை முயற்சி வழக்கு ஒன்றில், அவரை போலீசார் தேடி வந்தனர். ஸ்டாலின், மாரிகுப்பம் ரயில் நிலையத்திலிருந்து ஒரு கி.மீ., தொலைவில் உள்ள கல்லறை அருகில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அங்கு சென்ற போலீசார், அவரை சரணடையும்படி எச்சரித்தனர். ஆனால், அவரோ போலீஸ் ஏட்டு சுனில் என்பவரை, கத்தியால் குத்தி விட்டு தப்பியோடினார். இதனால், போலீசார், அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில், ஸ்டாலின் வலது காலில் குண்டு பாய்ந்து கீழே விழுந்தார். உடனடியாக, அவரை ராபர்ட்சன்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக, கோலார் மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us