Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ முதலீட்டாளர்களிடம் மோசடி பத்மஸ்ரீ விருது பெற்றவர் கைது

முதலீட்டாளர்களிடம் மோசடி பத்மஸ்ரீ விருது பெற்றவர் கைது

முதலீட்டாளர்களிடம் மோசடி பத்மஸ்ரீ விருது பெற்றவர் கைது

முதலீட்டாளர்களிடம் மோசடி பத்மஸ்ரீ விருது பெற்றவர் கைது

ADDED : ஆக 07, 2024 02:14 AM


Google News
Latest Tamil News
திருச்சூர், கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர் சி.மேனன். ஹீவான் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்த மேனன், 2016ம் ஆண்டு நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதை பெற்றவர்.

இவர், தன் நிறுவனத்தில் முதலீடு செய்தால், ஐந்து ஆண்டுகளில் இரு மடங்கு பணத்தை தருவதாக பொதுமக்களிடம் ஆசை வார்த்தை கூறினார். அதிக வட்டிக்கு ஆசைப்பட்ட ஏராளமானோர், மேனன் நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.

இந்நிலையில் முதிர்வு காலம் முடிந்தும், முதலீட்டாளர்களிடம் பெற்ற பணத்தை திருப்பி செலுத்தாமல் மேனன் ஏமாற்றினார்.

இவ்வாறு 62 பேரிடம் மொத்தம், 7. 78 கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து 18 பேர், மேனன் மீது அளித்த புகாரை தொடர்ந்து, வழக்கு விசாரணை குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவரது சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளன.

சுந்தர் சி.மேனன் மீது வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அந்த தகவலை மறைத்து அவர் விருது பெற்றதாக கேரள உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே பொதுநல மனுவை சிலர் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us