Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ சபரிமலையில் ஆடி மாத பூஜை வரும் 15ம் தேதி நடை திறப்பு

சபரிமலையில் ஆடி மாத பூஜை வரும் 15ம் தேதி நடை திறப்பு

சபரிமலையில் ஆடி மாத பூஜை வரும் 15ம் தேதி நடை திறப்பு

சபரிமலையில் ஆடி மாத பூஜை வரும் 15ம் தேதி நடை திறப்பு

ADDED : ஜூலை 10, 2024 02:05 AM


Google News
தமிழகத்தில் ஆடி 1, ஜூலை 17-ல் வருகிறது. ஆனால், கேரளாவில் ஜூலை 16ல் ஆடி 1 வருகிறது. இதனால், சபரிமலை நடை ஜூலை 15 மாலை, 5:00 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்று பூஜைகள் எதுவும் இருக்காது. இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

ஜூலை 16 அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டதும் தந்திரி மகேஷ் மோகனரரு அய்யப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் நடத்திய பின், நெய்யபிஷேகத்தை துவக்கி வைப்பார். எல்லா நாட்களிலும் கணபதி ஹோமம், உஷ பூஜை, உச்ச பூஜை, களபாபிஷேகம், கலசாபிஷேகம், மாலையில் தீபாராதனை, இரவு அத்தாழ பூஜை, இரவு, 7:00 மணிக்கு படி பூஜை நடைபெறும். காலை முதல் இரவு வரை நடைபெறும் உதயாஸ்தமன பூஜையும் உண்டு.

ஜூலை 20 இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். ஆன்லைன் முன்பதிவில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் போது, இந்த தேதி மாற்றத்தை பக்தர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என, தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us