பா.ஜ., ராஜ்யசபா தலைவராக நட்டா நியமனம்
பா.ஜ., ராஜ்யசபா தலைவராக நட்டா நியமனம்
பா.ஜ., ராஜ்யசபா தலைவராக நட்டா நியமனம்
ADDED : ஜூன் 24, 2024 04:47 PM

புதுடில்லி: பா.ஜ., ராஜ்யசபா தலைவராக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பா.ஜ.,வின் தேசிய தலைவராக இருப்பவர் நட்டா. இவரது பதவிக் காலம் கடந்த ஜனவரியிலேயே முடிவுக்கு வந்தாலும் லோக்சபா தேர்தலுக்காக ஏற்கனவே நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், வரும் ஜூன் 30ம் தேதியுடன் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்றபோது, அதில் சுகாதாரத்துறை அமைச்சராக நட்டா பொறுப்பேற்றார்.
இந்நிலையில் பா.ஜ., ராஜ்யசபா தலைவராக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா நியமனம் செய்யப்பட்டுள்ளார். தலைவராக இருந்த பியூஷ் கோயல் தற்போது லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றதால், ராஜ்யசபா தலைவராக நட்டா நியமனம் செய்யப்பட்டுள்ளார். பியூஷ் கோயல் வகித்த சபை முன்னவர் பதவி, ஆளுங்கட்சியை ராஜ்யசபாவில் தலைமையேற்று நடத்தும் முக்கியமான பதவி. தற்போது அந்த பதவி நட்டா கையில் வந்துள்ளது.