Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ நாகேந்திரா, தத்தல் வீடுகளில் 2வது நாள் ஈ.டி., சோதனை

நாகேந்திரா, தத்தல் வீடுகளில் 2வது நாள் ஈ.டி., சோதனை

நாகேந்திரா, தத்தல் வீடுகளில் 2வது நாள் ஈ.டி., சோதனை

நாகேந்திரா, தத்தல் வீடுகளில் 2வது நாள் ஈ.டி., சோதனை

ADDED : ஜூலை 12, 2024 07:08 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு: வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் நாகேந்திரா, எம்.எல்.ஏ., பசனகவுடா தத்தல் வீடுகளில் 2வது நாளாக, ஈ.டி., எனும் அமலாக்க துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.

வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேட்டில், பெங்களூரு எம்.ஜி., ரோட்டில் உள்ள யூனியன் வங்கிக்கும் தொடர்பு இருப்பது தெரிந்தது.

இதுகுறித்து வங்கியின் மண்டல பொறுப்பாளர் மகேஷ் அளித்த புகாரில், சி.பி.ஐ., விசாரிக்கிறது. இந்த விசாரணையில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பது குறித்து, அமலாக்கத்துறைக்கு தகவல் சென்றது.

18 இடங்கள்


இதையடுத்து வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு தொடர்பாக, முன்னாள் அமைச்சர் நாகேந்திரா, ராய்ச்சூர் ரூரல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பசனகவுடா தத்தல் ஆகியோரின் வீடு அலுவலகங்கள் உட்பட 18 இடங்களில் நேற்று முன்தினம், அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

பெங்களூரில் உள்ள நாகேந்திரா, பசனகவுடா தத்தல் வீடுகளில் நள்ளிரவு 12:00 மணி வரை சோதனை நடந்தது. சோதனை முடிந்ததும் நாகேந்திரா, பசனகவுடா தத்தல் வீடுகளில் ஒரு அறையில் அமலாக்க துறையினர் தங்கினர்.

நேற்று காலை இரண்டாவது நாளாக இருவரின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

இருவரிடமும் அமலாக்க துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். நேற்று மாலை 5:00 மணியுடன் தத்தல் வீட்டில் சோதனை நிறைவடைந்தது. ஆனால் நாகேந்திரா வீட்டில் இரவு வரை சோதனை நீடித்தது.

தத்தல், தன் முன்னாள் உதவியாளர் பம்பண்ணா என்பவரின் வங்கி கணக்கிற்கு 25 லட்சம் ரூபாய் மாற்றியது தெரிந்ததால், பம்பண்ணாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் பிடித்து விசாரிக்கின்றனர்.

பம்பண்ணா யார்?


பம்பண்ணா குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது மிகவும் ஏழை குடும்பத்தில் பிறந்த அவர், கஷ்டப்பட்டு படித்து தேர்வுகளில் வெற்றி பெற்று, அரசு பள்ளி ஆசிரியர் ஆனார்.

அதன் பின்னர் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் நடத்திய 'கோடியாதிபதி' என்ற கன்னட நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதன் மூலம், பம்பண்ணாவுக்கு 50 லட்சம் ரூபாய் பரிசாக கிடைத்தது.

அதன்பின் அரசு தேர்வில் தேர்ச்சி பெற்று பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி ஆனார். அப்போது அரசியல்வாதிகள் சிலருடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது. முதலில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி., பி.வி.நாயக்கிடம் உதவியாளராக இருந்தார்.

அதன் பின்னர் தத்தலிடம் உதவியாளராக வேலை பார்த்ததும் தெரிய வந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us