Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ மூடா முறைகேடு கவர்னருக்கு கடிதம்

மூடா முறைகேடு கவர்னருக்கு கடிதம்

மூடா முறைகேடு கவர்னருக்கு கடிதம்

மூடா முறைகேடு கவர்னருக்கு கடிதம்

ADDED : ஜூலை 07, 2024 03:14 AM


Google News
மைசூரு: 'மைசூரு நகர வளர்ச்சி ஆணைய முறைகேடு தொடர்பாக, உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும்' என, கர்நாடக கரும்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியது.

இதுகுறித்து, கவர்னர் தாவர்சந்துக்கு கரும்பு விவசாயிகள் சங்கம் எழுதிய கடிதம்:

மூடா எனும் மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தில் பெருமளவில் முறைகேடு நடந்துள்ளது. முதல்வரின் மனைவியே, சட்டவிரோதமாக வீட்டுமனை பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும்.

இந்த முறைகேடு தொடர்பாக, எதிர்க்கட்சிகளும் கூட, போராட்டத்தை துவக்கி உள்ளன. சி.பி.ஐ., விசாரணைக்கு வலியுறுத்துகின்றனர். அதே போன்று கரும்பு விவசாயிகள் சங்கமும் வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us