Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ துபாயில் இருந்து போதைபொருள் சப்ளை செய்த தாய், மகள்

துபாயில் இருந்து போதைபொருள் சப்ளை செய்த தாய், மகள்

துபாயில் இருந்து போதைபொருள் சப்ளை செய்த தாய், மகள்

துபாயில் இருந்து போதைபொருள் சப்ளை செய்த தாய், மகள்

ADDED : ஜூலை 08, 2024 06:27 AM


Google News
பெங்களூரு: வெளிநாட்டில் இருந்து பெங்களூருக்கு போதைப் பொருள் சப்ளை செய்த தாய், மகள் உட்பட மூவர் மீது வழக்கு பதிவாகியுள்ளது.

பெங்களூரில் வசிக்கும் தொழிலதிபரின் 23 வயது மகன், போதைப் பொருட்களுக்கு அடிமையாக இருந்தார். இவரை திருத்த தந்தை முயற்சித்தும் பலன் இல்லை. மகனுக்கு போதைப் பொருள் சப்ளை செய்வோரை கண்டுபிடித்து, நடவடிக்கை எடுக்கும்படி கோரி, சி.சி.பி., போலீசாரிடம் புகார் அளித்தார்.

போலீசாரும் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினர். துபாயில் வசிக்கும் லீனாவும், இவரது மகள் நதாலியாவும் பெங்களூரின் ரஞ்சன் என்பவர் மூலமாக, தொழிலதிபரின் மகனுக்கு போதைப் பொருள் சப்ளை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தாயும், மகளும் வெளிநாட்டில் இருந்தபடியே, பெங்களூரின் ரஞ்சனுக்கு ஹைட்ரோ கஞ்சா, எம்.டி.எம்.ஏ., கிறிஸ்டல் சப்ளை செய்தனர்.

மகள் நதாலியா அவ்வப்போது, துபாயில் இருந்து பெங்களூருக்கு வருவார். வாடிக்கையாளர்களை ஈர்ப்பார். இவர்களிடம் பணம் பெற, வங்கியில் தனி கணக்கு திறந்துள்ளார்.

லீனா, நதாலியா, ரஞ்சன் ஆகியோர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணைக்கு ஆஜராகும்படி மூவருக்கும் சம்மன் அளித்துள்ளனர். போதைப் பொருள் சப்ளையில் மேலும் பலருக்கு தொடர்பிருப்பதாக, தகவல் கிடைத்துள்ளது. எனவே தீவிர விசாரணை நடத்துகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us