/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மதுரை டூ பெங்களூரு வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் துவக்கம் மதுரை டூ பெங்களூரு வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் துவக்கம்
மதுரை டூ பெங்களூரு வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் துவக்கம்
மதுரை டூ பெங்களூரு வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் துவக்கம்
மதுரை டூ பெங்களூரு வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் துவக்கம்
ADDED : ஜூன் 17, 2024 10:15 AM

மதுரை: மதுரை- பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை வரும் ஜூன் 20ம் தேதி காணொலி வாயிலாக பிரதமர் மோடி துவங்கி வைக்க உள்ள நிலையில், அதற்கான சோதனை ஓட்டம் இன்று(ஜூன் 17) நடைபெற்றது.
மதுரை - பெங்களூரு செல்லும் வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஒசூர், வழியாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த புதிய வந்தே பாரத் மூலம் திருச்சி பயணிகளும் விரைவாக பெங்களூரு செல்ல இயலும். மதுரை, பெங்களூருவுக்கு இடையே வர்த்தக, தொழில் தொடர்பு அதிகரிக்கும்.
இந்த ரயில் சேவையை வரும் ஜூன் 20ம் தேதி காணொலி வாயிலாக பிரதமர் மோடி துவங்கி வைக்க உள்ள நிலையில், அதற்கான சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது. மதுரையில் இருந்து காலை 5.15 மணிக்கு கிளம்பிய ரயில், மதியம் 2 மணிக்கு பெங்களூரு சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மதுரையில் இருந்து பெங்களூரு செல்வதற்கு போதுமான ரயில்கள் இல்லாத நிலையில் இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு கிடைக்க வாய்ப்புள்ளது.